/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வுரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு
ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு
ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு
ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 12:40 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், நேற்று நடந்த பொது விநியோக குறைதீர் கூட்டத்தில் 121 மனுக்கள் மீது உடனயாக தீர்வு காணப்பட்டது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜூன் மாதத்திற்கான பொதுவிநியோக குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் மேல்ஒட்டிவாக்கம் கிராமம், உத்திரமேரூரில் சாலவாக்கம், வாலாஜாபாதில் ஊத்துக்காடு, ஸ்ரீபெரும்புதுாரில் காரந்தாங்கல், குன்றத்துாரில் செரப்பனஞ்சேரி என, ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது.
இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் உள்ள ஐந்து தாலுகாவிலும், மொத்தம் 166 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 121 மனுக்களுக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 45 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.