Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செடி, கொடி வளர்ந்துள்ள கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடி, கொடி வளர்ந்துள்ள கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடி, கொடி வளர்ந்துள்ள கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடி, கொடி வளர்ந்துள்ள கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ADDED : அக் 15, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
கோனேரிகுப்பம்:கோனேரிகுப்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, பிரதான சாலையோரம் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாய் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், கோனேரிகுப்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us