Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் பிப்.,ல் கும்பாபிஷேகம்

 காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் பிப்.,ல் கும்பாபிஷேகம்

 காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் பிப்.,ல் கும்பாபிஷேகம்

 காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் பிப்.,ல் கும்பாபிஷேகம்

ADDED : டிச 01, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்: திம்மையின்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. புனரமைப்பு பணி நிறைவு பெற்றதும் வரும் 2026ல், பிப்ரவரி மாதம் கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை அடுத்துள்ள திம்மையன்பேட்டையில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரண்டு கால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த கோவில் கட்டடத்தின் மேல்புறத்தில் காவல் தெய்வங்கள் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சிதிலம் அடைந்து இருந்தன. மேலும், கோவில் வளாகத்தை சுற்றிலுமான தரைதளத்திற்கான கான்கிரீட் பெயர்ந்து வந்தது. இக்கோவிலில் சிதிலம் அடைந்த பகுதிகளை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர்.

அதன்படி, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில், சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவில் தளம் சுற்றுபாதையில் கான்கிரீட் பூசுதல், தரைதளம் புதியதாக அமைத்தல், நந்தி மற்றும் பலிபீடத்திற்கு புதிய மேடை உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

புனரமைப்பு பணி நிறைவு பெற்றதும், வரும் 2026ல், பிப்ரவரி மாதம் கும்பாபிஷேக விழா நடத்த, கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us