Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

ADDED : ஜன 11, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுகொட்டி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் இருந்து கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

இதனால், இங்கு வசிப்போர் இரு நாட்களாக குளிக்காமலும், இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பறைக்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

இதனால், வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர் வீட்டிற்குள் ரிட்டர்ன் ஆவதால், துர்நாற்றம் வீசுகிறது.

வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பஞ்சுகொட்டி தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us