Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நெல் கொள்முதல் நிலையம் வாலாஜாபாதில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் வாலாஜாபாதில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் வாலாஜாபாதில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் வாலாஜாபாதில் திறப்பு

ADDED : செப் 09, 2025 01:02 AM


Google News
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏரி மற்றும் கிணறு பாசனம் மூலம் அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர். கடந்த சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்களை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இதையடுத்து, ஒன்றியத்தின் பல பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, நத்தாநல்லுார், மதுராநல்லுார் மற்றும் அயிமிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவங்கப்பட்டது.

உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us