/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நெல் கொள்முதல் நிலையம் தென்னேரியில் திறப்பு நெல் கொள்முதல் நிலையம் தென்னேரியில் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் தென்னேரியில் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் தென்னேரியில் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் தென்னேரியில் திறப்பு
ADDED : செப் 12, 2025 09:15 PM
வாலாஜாபாத்:தென்னேரி, அகரம் ஆகிய கிராமங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், ஏரி மற்றும் கிணற்று பாசனம் மூலம், விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர். சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, ஒன்றியத்தில் நத்தாநல்லுார், அயிமிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையம் துவங்கி செயல்படுகிறது.
இந்நிலையில், தென்னேரியிலும், அகரம் கிராமத்திலும் நேற்று, நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், இவற்றை திறந்து வைத்தார்.