Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஒரகடம் மேம்பாலத்தில் மண்குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஒரகடம் மேம்பாலத்தில் மண்குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஒரகடம் மேம்பாலத்தில் மண்குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஒரகடம் மேம்பாலத்தில் மண்குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஜன 30, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
ஒரகடம்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம் நான்கு சாலை சந்திப்பில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், மேம்பாலத்தின் மேற்புறம் பராமரிப்பின்றி உள்ளது. பாலத்தின் இருபுறமும் மண் குவிந்து காணப்படுகிறது. மேலும், மேம்பால சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

இதனால், மேம்பாலத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மண்குவியலில் சிக்கி, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண்குவியலை அகற்றி, மேம்பால சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us