/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இரவில் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதிஇரவில் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி
இரவில் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி
இரவில் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி
இரவில் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 11, 2024 12:20 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், ஒரகடம் மேபாலம் அருகே, ஏரியில் கொட்டப்படுகின்றன.
இதை இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் இருந்த வெளியேறும் கரும்புகையினால், அவ்வழியாக செல்வோர் அவதி அடைகின்றனர்.
எனவே, இரவு நேரங்களில் குப்பை கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.