Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் தெருயோரம் கொட்டும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

வாலாஜாபாதில் தெருயோரம் கொட்டும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

வாலாஜாபாதில் தெருயோரம் கொட்டும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

வாலாஜாபாதில் தெருயோரம் கொட்டும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

ADDED : மே 27, 2025 01:19 AM


Google News
வாலாஜாபாத், வாலாஜாபாத், 15வது வார்டில், பச்சையம்மன் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில், பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளதால், காலை மற்றும் மாலை நேரத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் அச்சாலையின் இருபுறமும், சமீப காலமாக ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுகின்றன.

குறிப்பாக டாஸ்மாக் கடை அருகில் உள்ள சாலையோரங்களில் இறைச்சி கழிவு அதிகளவு காணப்படுகின்றன.

வாலாஜாபாத் ராஜவீதி மற்றும் பஜார் வீதியில் இறைச்சி கடை வைத்துள்ளவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு மழை நேரங்களில் இறைச்சி கழிவு கலந்த நீர் சாலையில் வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே, இச்சாலையோரங்களில் கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுவதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us