Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

ADDED : ஜூன் 10, 2025 10:24 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தர்மராஜர் சமேத திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். முனுசாமி கவி வாசித்து வருகிறார்.

விழாவில், மற்றொரு நிகழ்வாக, நாளை முதல், வரும் 21ம் தேதி வரை, தினமும், இரவு 10:00 மணிக்கு, ரேணுகாம்பாள் கட்டைகூத்து நாடக மன்றத்தினரின், ஆசிரியர் சீதாராமன் குழுவினரின் மஹாபாரதம் நடக்கிறது. முதல் நாளான நாளை வில் வளைப்பு, திரவுபதி திருமணம் என்ற தலைப்பில் நாடகம் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 16ம் தேதி அர்ச்சுனன் தபசும், 22ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us