Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.38 லட்சம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.38 லட்சம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.38 லட்சம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.38 லட்சம்

ADDED : மார் 25, 2025 09:49 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல் 10; திருப்பணி உண்டியல் 1; கோசாலை உண்டியல் 1, என, மொத்தம் 12 உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வர் அலமேலு ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள், தன்னார்வலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.

இதில், மொத்தம், 38 லட்சத்து 24,412 ரூபாய் ரொக்கமும், 27 கிராம் தங்கமும், 371 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us