Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பணியாளர்கள் இன்றி மூடி கிடக்கும் போக்குவரத்து உதவி மையம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பணியாளர்கள் இன்றி மூடி கிடக்கும் போக்குவரத்து உதவி மையம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பணியாளர்கள் இன்றி மூடி கிடக்கும் போக்குவரத்து உதவி மையம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பணியாளர்கள் இன்றி மூடி கிடக்கும் போக்குவரத்து உதவி மையம்

ADDED : ஜன 11, 2024 12:56 AM


Google News
Latest Tamil News

பணியாளர்கள் இன்றி மூடி கிடக்கும் போக்குவரத்து உதவி மையம்


இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசலை கட்டுப்படுத்த, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் மற்றும் தனியார் தொழிற்சாலை சார்பில் காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி 24 மணி நேரமும் நடந்தது.

இதற்காக, அங்கு போக்குவரத்து உதவி மையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மையம் மூடியே கிடக்கிறது. இந்த மையத்தை திறந்து மீண்டும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.-

- என்.நிரஞ்சன், இருங்காட்டுக்கோட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us