Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு ஸ்டேஷனரி வாங்க ஆர்வம்

ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு ஸ்டேஷனரி வாங்க ஆர்வம்

ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு ஸ்டேஷனரி வாங்க ஆர்வம்

ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு ஸ்டேஷனரி வாங்க ஆர்வம்

ADDED : மே 26, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:கோடை விடுமுறைக்குப்பின், ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படுகின்றன.

பள்ளி திறப்பதற்கு ஒரு வாரமே உள்ளதால், காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ - -மாணவியருக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வாட்டர் பாட்டில், உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் ஸ்டேஷனரி கடைகளிலும், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் விற்பனை செய்யும் கடைகளிலும் நேற்று விற்பனை களை கட்டியது.

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்து தங்களுக்கு தேவையான ஸ்டேஷனனரி பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஸ்டேஷனரி பொருட்களில், நோட்டு புத்தகம் மட்டும் 10 - 15 சதவீதம் வரை விலை வழக்கமாக உயரும். ஆனால், நடப்பு விலை உயரவில்லை. இதனால், கடந்த ஆண்டு விலைக்கே விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us