Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செவிலிமேடில் கால்வாய்க்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

செவிலிமேடில் கால்வாய்க்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

செவிலிமேடில் கால்வாய்க்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

செவிலிமேடில் கால்வாய்க்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜன 23, 2024 09:32 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, சம்பந்தமூர்த்தி நகர் பூங்காவை ஒட்டி, மழைநீர் கால்வாய் செல்கிறது. பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையோரம் உள்ள கால் வாய்க்கு ஒரு பக்கம் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம், ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

அதேபோல, மேய்ச்சலுக்கு இச்சாலையில் செல்லும் கால்நடைகளும் கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைகின்றன.

எனவே, விபத்தை தடுக்கும் வகையில், செவிலிமேடு, சம்பந்தமூர்த்தி நகர் பூங்கா பின்பக்கம் உள்ள மழைநீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us