Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில், 1999ல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறை, குளியல் அறை, துணி துவைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார், 10 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.

மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, முறையாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேதாஜி நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுகாதார வளாகம் கட்டப்பட்டு, 26 ஆண்டுகள் ஆவதால், கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தபின், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us