/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 09, 2025 11:19 PM
காஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ௩௮௩ மனுக்கள் ஏற்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்டா, பட்டா திருத்தம், உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை என, பல்வேறு வகையிலான கோரிக்கை தொடர்பாக 383 பேர் மனு அளித்தனர்.
மாற்றுத்திறனாளிகளிடம் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று, கலெக்டர் கலைச்செல்வி மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறுவுறுத்தினார்.