/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை
உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை
உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை
உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 22, 2025 08:36 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை அறிவியல் கல்லூரியில், நடப்பாண்டிற்கான இறுதி கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
மூன்று கட்டங்களாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே 27, ஜூன் 12 ஆகிய தேதிகளில் நடந்தது.
இதையடுத்து, இறுதி கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது. அதில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அனைத்து பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, விண்ணப்பித்துள்ள அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.