Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

ADDED : மே 23, 2025 07:56 PM


Google News
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, கடந்த 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் மதியம் 2:00 மணிக்கு, ரத்தின தனஞ்செயன், மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். ராஜநிதி இன்னிசை நிகழ்த்துகிறார்.

கடந்த 15ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், குண்டையார்தண்டலம் மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது.

இதில், முக்கிய நிகழ்வாக, நாளை காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை ஓரிக்கை கிராமத்தினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us