Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குடற்புழு நீக்க மாத்திரை மாணவியருக்கு வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை மாணவியருக்கு வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை மாணவியருக்கு வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை மாணவியருக்கு வழங்கல்

ADDED : பிப் 09, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிப்., 9ல், தேசிய குடற்புழு நீக்க நாள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 1 முதல் 19 வயது வரையுள்ள, 3.81 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 'அல்பென்டசோல்' என்ற மாத்திரை நேற்று வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு அல்பென்டசோல் மாத்திரையை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.

மேலும், 20 முதல் 30 வயதுள்ள, 83,000 பெண்களுக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லுாரிகளில் வழங்கப்படும்.

இந்த பணிகளை சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் மேற்கொள்வர். விடுபட்டோருக்கு பிப்., 16ல் வழங்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us