Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பணியின்போது ஊழியர் மரணம்

பணியின்போது ஊழியர் மரணம்

பணியின்போது ஊழியர் மரணம்

பணியின்போது ஊழியர் மரணம்

ADDED : ஜன 29, 2024 04:25 AM


Google News
திருநின்றவூர் : திருநின்றவூர் அடுத்த பாக்கம், கணபதி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், 53; பாக்கம் ஊராட்சி ஒப்பந்த ஊழியர். பாக்கம், சம்பந்தம் நகரில் நேற்று முன்தினம் சாலை பணி நடந்தது.

அப்போது, சாலையோரத்தில் பதிக்கப்பட்டு இருந்த குடியிருப்புகளில் குடிநீர் குழாய் இணைப்பு குறித்து, பகுதிவாசிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.

உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.

திருநின்றவூர் போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us