Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை உயர்கல்வி, வங்கி கடன் பற்றி வழிகாட்டுதல்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை உயர்கல்வி, வங்கி கடன் பற்றி வழிகாட்டுதல்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை உயர்கல்வி, வங்கி கடன் பற்றி வழிகாட்டுதல்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை உயர்கல்வி, வங்கி கடன் பற்றி வழிகாட்டுதல்

ADDED : ஜூன் 28, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,:பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை, உயர்கல்வி, வங்கி கடன் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்றுமுன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உயர்கல்வி பயில தேவையான சான்றுகள் பெற முடியாத மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான துறைசார் அலுவலர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

மேலும், வங்கி கடன் உதவிகள்,உயர்கல்வி பிரிவுகள் தேர்வு செய்வது குறித்த ஆலோசனைகள் மற்றும் கல்லுாரிகளில் சேர்வதற்கான வழிகாட்டுதல் போன்ற உதவிகள் பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி,மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எழில், திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ, முன்னோடி வங்கி மேலாளர் திலீப், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us