Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

ADDED : செப் 09, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
உத் திரமேரூர் பேரூராட்சி, பாவோடும் தோப்பு தெருவில், மின்வாரியத்தின் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அங்குள்ள மின்கம்பம் ஒன்று முறையாக பராமரிப்பு இல்லாமல் கொடிகள் படர்ந்துள்ளன.

இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, வீட்டில் பயன்படுத்தும் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன.

எனவே, மின்கம்பத்தை சூழ்ந்து வளர்ந்து படர்ந்துள்ள கொடிகளை அகற்ற, உத்திர மேரூர் மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.துரைகிருஷ்ணன், உத்திரமேரூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us