Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பொன்னியம்மன், செல்லியம்மன் கோவில்களில் தேரோட்டம்

பொன்னியம்மன், செல்லியம்மன் கோவில்களில் தேரோட்டம்

பொன்னியம்மன், செல்லியம்மன் கோவில்களில் தேரோட்டம்

பொன்னியம்மன், செல்லியம்மன் கோவில்களில் தேரோட்டம்

ADDED : செப் 04, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, கிளக்காடி பொன்னியம்மன், எஸ்.மாம்பாக்கம் செல்லியம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு தேரோட்டம் நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி பொன்னியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான ஆவணி தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து, ஊரணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர்.

மாலை 4:00 மணிக்கு கிராமத்தினர் பெருமாள் கோவிலில் இருந்து, சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வைத்தனர்.

பின், இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பொன்னியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

அதேபோல, எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலிலும், நேற்று முன்தினம் இரவு தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய செல்லியம்மன், கிராம வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us