Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ADDED : செப் 29, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை காந்தி நகர், முதல் தெருவில், செடி, கொடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை, காந்தி நகர் முதல் தெரு மற்றும் சுற்றிஉள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், காஞ்சிபுரத்தில் மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது.

எனவே, பருவமழை துவங்குவதற்குள் காஞ்சிபுரம் ஓரிக்கை காந்தி நகர், முதல் தெருவில், செடி, கொடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us