Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கால்வாய் ஆக்கிரமிப்பால் இடையூறு

கால்வாய் ஆக்கிரமிப்பால் இடையூறு

கால்வாய் ஆக்கிரமிப்பால் இடையூறு

கால்வாய் ஆக்கிரமிப்பால் இடையூறு

ADDED : செப் 02, 2025 01:27 AM


Google News
வாலாஜாபாத், வாலாஜாபாத் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில், தெருக்கள் மற்றும் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருவின் பல்வேறு பகுதிகளில் வீடு கட்டி உள்ள குடியிருப்பினர் தங்களது வீடுகளையொட்டிய இருபுற தெரு பகுதிகளையும் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்துள்ளது.

மேலும், வீடுகளையொட்டிய கால்வாய் கரைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர்.

இதனால், தெருக்களின் அளவு குறைந்தும், கால்வாய்கள் துார்ந்தும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

குறிப்பாக கோபால் நாயுடுத் தெரு, வலம்புரி வினாயகர் கோவில் தெரு, வீரராகவ சுபேதர் தெரு, போஜக்காரத் தெரு, முனிசிப் நாராயணசாமி தெரு, சிவன்படை வீதி, மகிமைதாஸ் தெரு போன்ற தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இத்தெருவினரின் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல இயலாமல் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றன.

இதேபோன்று, பஜார்வீதி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் கரை மீது கட்டடங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.

எனவே, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் சிரமமின்றி செல்லவும், கால்வாய் கரை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us