Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நோட்டீஸ் அளித்து பா.ஜ., அழைப்பு

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நோட்டீஸ் அளித்து பா.ஜ., அழைப்பு

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நோட்டீஸ் அளித்து பா.ஜ., அழைப்பு

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நோட்டீஸ் அளித்து பா.ஜ., அழைப்பு

ADDED : ஜூன் 05, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்,:தமிழகம் முழுதும் உள்ள அறுபடை வீடுகளை சீரமைக்க வலியுறுத்தியும், முருகர் பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் ஜூன் 22ம் தேதி, முருகர் பக்தர்கள் பங்கேற்கும் மாநாடு, ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்று, முருக பெருமானின் ஆசி பெற வேண்டி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பா.ஜ., சார்பில் துண்டு பிரசுரம் அளித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில், வாலாஜாபாத் பகுதியினருக்கு நேற்று நோட்டீஸ் வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டது.

வாலாஜாபாத் பேருந்து நிலையம் மற்றும் ரவுண்டனா சாலையில் உள்ள பல்வேறு கடைகளின் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், பயணியர், பொது மக்கள் உள்ளிட்டோருக்கு மாநாட்டு விபரம் மற்றும் முருகன் படம் பதித்த அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் சிபி, மாலதி, செல்வம், வஜ்ரவேல், பாலா. நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us