Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

ADDED : மார் 23, 2025 10:40 PM


Google News
படப்பை:படப்பை அருகே உள்ள மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. அதே பகுதியில் உள்ள நர்சரி கார்டனில், செடி பராமரிக்கும் பணி செய்து வந்தார்.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, ஸ்பிளண்டர் பைக்கில், அன்பழகன் சென்றார்.

ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், மலைப்பட்டு பகுதியை கடந்தபோது, அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us