Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்

காஞ்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்

காஞ்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்

காஞ்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : ஜன 01, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில்,போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும்பேரணி, காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி அருகில் நிறைவு பெற்றது.

இதில், பங்கேற்ற போலீசார் மற்றும் சவீதா பார்மசி கல்லுாரி மாணவ- - மாணவியர், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

மேலும், மாவட்டம் முழுதும் சட்ட விரோதமான மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் போன்ற மதுவிலக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை, 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us