/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரைபை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை
பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை
பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை
பை - பாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : பிப் 06, 2024 04:51 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் - அரக்கோணம் பை - பாஸ் சாலை போடும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என, தலைமை பொறியாளர் அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தார் சாலை ஓரம், எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, தக்கோலம் கூட்டு சாலை முதல், தணிகைபோளூர் வரையில் பை - பாஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வளர்ச்சி பணிகளை, சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் லட்சுமிநாதன், பொறியாளர் முகுந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.