Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பில் கலெக்டர்கள் மீது குவியும் புகார்கள் இடமாற்றம் செய்ய வலுக்கும் கோரிக்கை

பில் கலெக்டர்கள் மீது குவியும் புகார்கள் இடமாற்றம் செய்ய வலுக்கும் கோரிக்கை

பில் கலெக்டர்கள் மீது குவியும் புகார்கள் இடமாற்றம் செய்ய வலுக்கும் கோரிக்கை

பில் கலெக்டர்கள் மீது குவியும் புகார்கள் இடமாற்றம் செய்ய வலுக்கும் கோரிக்கை

ADDED : ஜூன் 08, 2025 10:32 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களின் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை வரி, கட்டணங்களை வசூல் செய்யவும், புதிய வரியை விதிக்கவும், சொத்து வரியை மறு ஆய்வு செய்யவும் என, பல்வேறு பணிகளுக்கு பில் கலெக்டர்கள் எனப்படும் வரி வசூலிப்பாளர்கள் 13 பேர் உள்ளனர்.

பில் கலெக்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், வரி விதிப்பு செய்வது சம்பந்தமாக, கட்டட உரிமையாளர்களிடம் பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் உள்ளன.

ஏற்கனவே, பெண் பில் கலெக்டர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கினார். பில் கலெக்டர்கள் மீது கவுன்சிலர்களும் பல புகார்களை, மாநகராட்சி வருவாய் துறையில் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மாநகராட்சி கூட்டத்திலும் தெரிவித்தனர். அப்போது, மேயர் மகாலட்சுமியும், பில் கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய கடிதம் கொடுத்திருப்பதாக, மாநகராட்சி கூட்டத்திலேயே தெரிவித்திருந்தார்.

பல ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணியாற்றும் பில் கலெக்டர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதுவரை பில் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர்.

புகாருக்கு ஆளான, ஒரே இடத்தில் பணியாற்றும் பில் கலெக்டர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை வலுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us