Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலையோரம் படர்ந்த மரங்களால் விபத்து அபாயம்

சாலையோரம் படர்ந்த மரங்களால் விபத்து அபாயம்

சாலையோரம் படர்ந்த மரங்களால் விபத்து அபாயம்

சாலையோரம் படர்ந்த மரங்களால் விபத்து அபாயம்

ADDED : மே 24, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரியில் இருந்து, அருங்குன்றம் வழியாக, திருமுக்கூடல் மற்றும் சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. பழவேரி, அரும்புலியூர், சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையில், பழவேரி தனியார் கல் அரவை தொழிற்சாலை அருகே, சாலையோரத்தில் சீமை கருவேல மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளனர்.

இந்த மரங்கள் சாலையில் படர்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் வாகன ஓட்டிகளின் உடலை மரங்கள் பதம் பார்க்கின்றன.

சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகின்றன.

எனவே, பழவேரி - அருங்குன்றம் சாலையோரத்தில் படர்ந்துள்ள மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us