Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/4 லாரிகள் தீக்கிரை

4 லாரிகள் தீக்கிரை

4 லாரிகள் தீக்கிரை

4 லாரிகள் தீக்கிரை

ADDED : ஜன 16, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
பூந்தமல்லி,பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான, எஸ்.டி., பாடி ஒர்க்ஸ் என்ற பெயரில், லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிற்சாலை உள்ளது.

அங்கு, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள்பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை 5:30 மணி அளவில், அங்குள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒரு வாகனத்தில் பிடித்த தீ, மளமளவென மற்ற வாகனங்களுக்கும் பரவியது.

பணியில் இருந்த ஊழியர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர்.

தகவல் அறிந்த பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார் தீயணைப்பு நிலையத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், சில வாகனங்கள் தீயில் சிக்காமல் தப்பின. ஆனாலும், இந்த விபத்தில், ஒரு பழைய லாரி, மூன்று புதிய லாரிகள் சேதமடைந்தன.

இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us