/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 380ல் 25 சதவீதம் கூட தண்ணீர் இல்லாத 362 ஏரிகள் 380ல் 25 சதவீதம் கூட தண்ணீர் இல்லாத 362 ஏரிகள்
380ல் 25 சதவீதம் கூட தண்ணீர் இல்லாத 362 ஏரிகள்
380ல் 25 சதவீதம் கூட தண்ணீர் இல்லாத 362 ஏரிகள்
380ல் 25 சதவீதம் கூட தண்ணீர் இல்லாத 362 ஏரிகள்
ADDED : செப் 22, 2025 10:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில் 362 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான அளவே தண்ணீர் இருப்பதால்,கிராமவாசிகள், விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 380 சிறிய ஏரிகளும் உள்ளன. மாவட்ட அளவில் 761 ஏரிகள் இருப்பதாலேயே, இம்மாவட்டத்தை ஏரிகள் மாவட்டம் என அழைக்கின்றனர்.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் வரை வறண்ட நிலையில் ஏரிகள் இருப்பதால், வேளாண் பாசனத்திற்கு ஏரியை பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 208 ஏரிகளில், 25 சதவீத தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது.
அதேபோல, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில், 362 ஏரிகளில், 25 சதவீதத்திற்கும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. 18 ஏரிகளில் மட்டுமே 50 சதவீத தண்ணீர் உள்ளது.
இதனால், விவசாயிகளும், கிராம மக்களும் கவலை தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் கடும் வெயில் காரணமாக, ஆறு மாதங்களுக்கு மேலாக வறண்ட நிலையிலேயே ஏரிகள் உள்ளன.
சிறிய ஏரிகளை நம்பி, கால்நடைகள் வளர்க்கவும், வீட்டு தேவைக்கும், வேளாண்மைக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. ஆனால், ஏரிகளில் தண்ணீர் இல்லாததால், அடுத்த மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
சிறிய ஏரிகளின் பராமரிப்பு முறையாக இல்லை என, ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், தண்ணீரும் இல்லாதது, ஏமாற்றமளிப்பதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.