Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி - குருமஞ்சேரி இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

காஞ்சி - குருமஞ்சேரி இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

காஞ்சி - குருமஞ்சேரி இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

காஞ்சி - குருமஞ்சேரி இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

ADDED : ஆக 02, 2024 01:33 AM


Google News
உத்திரமேரூர்:காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத், பழையசீவரம், திருமுக்கூடல், அரும்புலியூர் வழியாக தடம் எண்;டி55ஏ என்ற அரசு பேருந்து குருமஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.

அருங்குன்றம், சீத்தாவரம், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும், இப்பேருந்து வாயிலாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இப்பேருந்து நாளொன்றுக்கு, மூன்று முறை இயங்கி வந்தது.

இந்நிலையில், பிற்பகல் 12:30 மணிக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, 1:30 மணிக்கு குருமஞ்சேரி பகுதிக்கு வந்தடையும் பேருந்து சேவை, ஓராண்டாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால், மதிய நேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து, அரும்புலியூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணிக்க பேருந்து வசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.

எனவே, நிறுத்தப்பட்ட மதிய நேர பேருந்து சேவையை மீண்டும் இயக்க, குருமஞ்சேரி மற்றும் அரும்புலியூர் உள்ளிட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us