Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாணவர்களுக்கு விஜயேந்திரர் அருளாசி

மாணவர்களுக்கு விஜயேந்திரர் அருளாசி

மாணவர்களுக்கு விஜயேந்திரர் அருளாசி

மாணவர்களுக்கு விஜயேந்திரர் அருளாசி

ADDED : ஜூன் 06, 2024 11:15 PM


Google News
காஞ்சிபுரம்:சங்கரா கல்வி குழுமத்தில், 2023 - 24ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று முதல், இரண்டு இடங்களை பிடித்த மாணவியருக்கு, காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கி, பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 45 மாணவர்கள், ‛பிறை அணிந்த பெருமாள்' என்ற நாடகத்தை நடித்தனர்.

இதில், சங்கரா பல்கலை துணைவேந்தர் சீனிவாசு, பதிவாளர் ஸ்ரீராம், முதல்வர் வெங்கட்ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us