Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஜூன் 23, 2024 03:59 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:

சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும், நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோர உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் பேருந்து, வேன், கனரக வாகனம் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பி விபத்தில் சிக்கும் நிலையில் ஏற்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த விளம்பர பேனர்கள் பல இடங்களில் ஆபத்தான நிலையில் கிழிந்து தொங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

குறிப்பாக தண்டலம், நசரத்பேட்டை, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் உட்பட பல பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us