/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் கெருகம்பாக்கம் குடியிருப்பில் விழாக்கோலம் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் கெருகம்பாக்கம் குடியிருப்பில் விழாக்கோலம்
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் கெருகம்பாக்கம் குடியிருப்பில் விழாக்கோலம்
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் கெருகம்பாக்கம் குடியிருப்பில் விழாக்கோலம்
'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் கெருகம்பாக்கம் குடியிருப்பில் விழாக்கோலம்
ADDED : ஜூலை 29, 2024 02:04 AM

குன்றத்துார்:'தினமலர்' நாளிதழ் மற்றும் 'கிரேஸ் சூப்பர் மார்க்கெட்' சார்பில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து,'ஆடி கார்னிவெல் -அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை,'நிசான் ஆட்டோ ரிலே' மற்றும் வி.பி.சி., ஜுவல்லரி, மயில் பிராண்ட் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அந்த வகையில், குன்றத்துார் அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.என்., குரோனா அடுக்குமாடி குடியிருப்பில்,நேற்று காலை முதல் இரவு வரை, ஆடி கார்னிவெல்- அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், உற்சாகத்துடன் பங்கேற்றதால், குடியிருப்பே திருவிழாக்கோலம் பூண்டது.
இந்நிகழ்வில் காலையில், பெண்களுக்கான சமையல் போட்டி மற்றும் கோலப்போட்டி நடந்தது. ஆண்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.
மாலையில் 'டாய் ரயில், ஜம்பிங் பலுான், வாட்டர் மார்க் பெயின்ட்' மற்றும் கேலி சித்திரம், மேஜிக் ஷோ, ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
மேலும், உறியடி உள்ளிட்ட பல வகை போட்டிகளில் முதியோர் முதல் சிறுவர்கள் வரை உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.
கிரேஸ் சூப்பர் மார்க்கெட் சார்பில் ஷாப்பிங் போட்டிகள், வி.பி.சி., ஜுவல்லரி சார்பில் மனைவியருக்கு கணவர்கள் நகை அணிவிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ரங்கோலி கோலம், சமையல் போட்டி சிறப்பாக இருந்தது. மாலையில் சிறுவர்கள், பெரியவர்கள் 'மேஜிக்' போட்டியை கண்டு ரசித்தனர். வார விடுமுறை நாள், இந்த வாரம் எங்களுக்கு திருவிழா போல் இருந்தது.
- எஸ்.அனிதா,
அடுக்குமாடி குடியிருப்புவாசி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தந்தை, மகன்கள் இணைந்து குடியிருப்புவாசிகளுடன் விளையாடியது, மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
- ஏ.பாலாஜி,
அடுக்குமாடி குடியிருப்புவாசி.
இன்று, 'தினமலர்' சார்பில் நடந்த விழா சிறப்பாக அமைந்தது. குடியிருப்புவாசிகள் ஒன்றாக இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்ச்சியை அனைத்து அடுக்குமாடி குடியிருப்பிலும் நடத்த வேண்டும்.
- ஜி.ஆர்.தேசிகன்,
அடுக்குமாடி குடியிருப்புவாசி.