/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மனைவி பிறந்த நாளுக்கு 'டெகரேஷன்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து பலி மனைவி பிறந்த நாளுக்கு 'டெகரேஷன்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
மனைவி பிறந்த நாளுக்கு 'டெகரேஷன்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
மனைவி பிறந்த நாளுக்கு 'டெகரேஷன்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
மனைவி பிறந்த நாளுக்கு 'டெகரேஷன்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : ஜூன் 08, 2024 04:45 AM
அசோக் நகர் : மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால், 29. இவர், மேற்கு மாம்பலம், ஆரிய கவுடா சாலையில், 'பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தார்.
இவரது மனைவி கீர்த்தி, 25. இவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், மனைவியின் 25வது பிறந்த நாளை கொண்டாட, நேற்று முன்தினம் மாலை வீட்டில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் அகஸ்டின் பால் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அகஸ்டின் பால் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார், உடலை மீட்டு கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.