/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு
வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு
வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு
வீட்டிலிருந்து சென்றவர் ஏரியில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 05, 2024 02:08 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 38. இவரது மனைவி கோமளா.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற இளங்கோவன், நள்ளிரவு வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தார், அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.
இந் நிலையில், நேற்று காலை மண்ணுார் ஏரியில் ஒருவர் மூழ்கி இருப்பதாக தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார், இளங்கோவன் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் மது போதையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.