Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூரில் துாய்மை பணிக்கு டிராக்டர் வழங்கல்

உத்திரமேரூரில் துாய்மை பணிக்கு டிராக்டர் வழங்கல்

உத்திரமேரூரில் துாய்மை பணிக்கு டிராக்டர் வழங்கல்

உத்திரமேரூரில் துாய்மை பணிக்கு டிராக்டர் வழங்கல்

ADDED : ஜூன் 13, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:தூய்மை பாரத இயக்கம் சார்பில், கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் துப்புரவு மற்றும் துாய்மை பணியாளர்கள் கொண்டு இப்பணிகள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தில், ஊராட்சிகளில் குவியும் குப்பையை ஒன்று சேர்த்து அதை இடமாற்றும் பொருட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கப்படுகிறது.

அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகர், சாலவாக்கம், அரும்புலியூர் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர் வண்டி நேற்று வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி ஆகியோர் பங்கேற்று சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் டிராக்டர் மற்றும்வாகனத்திற்கான சாவியை வழங்கினர்.

தி.முக, ஒன்றிய செயலர்கள் ஞானசேகரன், குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us