Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எப்.எம்.எஸ்.சி.ஐ.., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது

எப்.எம்.எஸ்.சி.ஐ.., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது

எப்.எம்.எஸ்.சி.ஐ.., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது

எப்.எம்.எஸ்.சி.ஐ.., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது

ADDED : ஜூன் 03, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
சென்னை, : 'எப்.எம்.எஸ்.சி.ஐ., தேசிய ரேலி ஸ்பிண்ட் சாம்பியன்ஷிப்' பைக் ரேஸ் முதல் சுற்று போட்டி, சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று நடந்தது.

அதில், குரூப் ஏ - 550 சிசி பிரிவு போட்டியில், 8:36:870 நிமிடங்களில் கடந்து, சுஹைல் அகமது முதலிடம் பிடித்தார்.

அவரைத் தொடர்ந்து, கவுஸ்துபா, 8:47:723 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், ரெஹானா 9:37:111 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அதேபோல், 550 சி.சி., புல்லட் பிரிவில், 8:52:268 நிமிடங்களில் கடந்த சுஹைல் அகமது முதலிடத்தையும், 9:07:269 நிமிடங்களில் கடந்த முகமது ஜாஹீர் இரண்டாம் இடத்தையும், 9:28:480 நிமிடங்களில் கடந்த சுஹாஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும், 550 சி.சி., ஓபன் பிரிவில், 8:32:642 கடந்து சுஹைல் அகமது முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து, 8:43:627 நிமிடங்களில் கவுஸ்துபாவும், 8:59:141 நிமிடங்களில் ஹேமந்த் கவுடாவும், முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

மூன்று பிரிவிலும், முதலிடம் பிடித்த சுஹைல் அகமது, பெங்களூரு அணியை முன்னிலைப் படுத்தினார்.

தமிழகத்துக்கான ஸ்பிரின்ட் ஸ்டார், 260 சி.சி., பிரிவில், கோவை சரவணகுமார் 9:27:785 நிமிடத்திலும், தங்கராஜ் 9:37:116 நிமிடத்திலும் கடந்து, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். அதேபோல், 131 சி.சி., 165 சி.சி., பிரிவுகளில், குடகு வீரர் ராய் முதலிடம் பிடித்தார்.

தொடர்ந்து, 260 சி.சி., - 261 சி.சி., - 450 சி.சி., பிரிவுகளுக்கான போட்டிகளும் நடந்தன. இந்த தென்மண்டல தொடருக்கான அடுத்த சுற்று, அடுத்த மாதம் 20, 21ம் தேதிகளில் பெங்களூரில் நடக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us