Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சகதியாக மாறிய சாலையால் அவதி

சகதியாக மாறிய சாலையால் அவதி

சகதியாக மாறிய சாலையால் அவதி

சகதியாக மாறிய சாலையால் அவதி

ADDED : ஜூன் 22, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
விஷார்:காஞ்சிபுரம் ஒன்றியம், விஷார் ஊராட்சி, இந்திரா நகரில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு சாலை வசதி இல்லாமல், மண் சாலையாக உள்ளதால், லேசான மழைக்கே சகதியாக மாறிவிடுகிறது.

இதனால், சகதி சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரும் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே விஷார் ஊராட்சி, இந்திரா நகருக்கு சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us