Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

ADDED : ஜூலை 09, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் - அரக்கோணம் தார் சாலை ஓரம், எம் - சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

சாலை நன்றாக இருப்பதால், ஆடு, மாடுகள் ஜாலியாக படுத்து ஓய்வு எடுத்து வருகின்றன.

குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் ஒலிமுகமதுபேட்டை மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, கருப்படித்தட்டடை ஆகிய பகுதிகளில், சாலை நடுவே மாடு படுத்து ஓய்வு எடுக்கின்றன.

இதனால், அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிடுகின்றன.

எனவே, சாலை நடுவே படுத்திருக்கும் மாடுகளை பிடித்து, கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us