Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ முத்துமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

ADDED : ஜூலை 02, 2024 03:16 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில் உள்ளது முத்து மாரியம்மன் கோவில். அப்பகுதியினர், காவல் தெய்வமாக முத்துமாரியம்மனை வழிபடுகின்றனர்.

இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி, ஆடி மாதங்களில் கூழ் வார்த்தல் விழா நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, மூன்று நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

நேற்று காலை, குண்ணவாக்கம் கிராமத்தில் உள்ள விநாயகர், கெங்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு குடம் அலங்காரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து குடம் அலங்காரத்தில் அம்மனின்வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

மதியம் 1:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா நடந்தது. விழாவில், குண்ணவாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us