Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

ADDED : ஜூன் 25, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
சூணாம்பேடு, புதுச்சேரி மாநிலம், நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 35. இவர், புதுச்சேரி மாநிலத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று மாலை, தனது நண்பரான சாமுவேல் மற்றும் இரண்டு பேருடன், சொந்த வேலை காரணமாக, சென்னை சென்று இனோவா காரில் வீடு திரும்பியுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றபோது, சூணாம்பேடு அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி, கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

இதில், காரை ஓட்டிச் சென்ற போலீஸ்காரர் செல்வம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த சாமுவேல் மற்றும் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சூணாம்பேடு போலீசார், வழக்குப்பதிந்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us