Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வடிகால்வாய் மேன்ஹோல் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

வடிகால்வாய் மேன்ஹோல் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

வடிகால்வாய் மேன்ஹோல் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

வடிகால்வாய் மேன்ஹோல் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

ADDED : மார் 13, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையின் இரு ஓரங்களிலும் மழைநீர் வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத் துறை வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், வேதாச்சலம் நகர், சர்ச் அருகில், மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்டுள்ள, ‛மேன்ஹோல்' மூடி உடைந்த நிலையில் உள்ளது. சாலை தரைமட்டத்தில், கால்வாய் ‛மேன்ஹோல்' பகுதி திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் சாலையோரம் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, மழைநீர் வடிகால்வாயின, 'மேன்ஹோல்' மீது சேதமடைந்த நிலையில் உள்ள பழைய மூடியை அகற்றிவிட்டு, புதிய மூடி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us