Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ படப்பை மேம்பால பணி அதிகாரிகள் ஆலோசனை

படப்பை மேம்பால பணி அதிகாரிகள் ஆலோசனை

படப்பை மேம்பால பணி அதிகாரிகள் ஆலோசனை

படப்பை மேம்பால பணி அதிகாரிகள் ஆலோசனை

UPDATED : மார் 14, 2025 12:35 AMADDED : மார் 14, 2025 12:33 AM


Google News
படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை பஜார் பகுதியில் நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2022, ஜனவரியில் துவங்கி தற்போது வரை மந்த கதியில் நடக்கிறது.

தற்போது, 70 சதவீதத்திற்கு மேல் பாலம் கட்டுமான பணி நிறைவுற்ற நிலையில், சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலை குறுகலாகி உள்ளது.

இதனால், போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், படப்பை மேம்பால பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன், நெடுஞ்சாலை துறை, காவல் துறையினருடன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கவும், நெரிசலை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us