Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரதட்சணை கொடுமையால் படப்பை புதுப்பெண் பலி? உறவினர்கள் சாலை மறியல்

வரதட்சணை கொடுமையால் படப்பை புதுப்பெண் பலி? உறவினர்கள் சாலை மறியல்

வரதட்சணை கொடுமையால் படப்பை புதுப்பெண் பலி? உறவினர்கள் சாலை மறியல்

வரதட்சணை கொடுமையால் படப்பை புதுப்பெண் பலி? உறவினர்கள் சாலை மறியல்

ADDED : ஜூலை 17, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
மணிமங்கலம்:படப்பையை அடுத்த சாலமங்கலம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 25; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி மஞ்சுளா, 27. இவர்களுக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 13வது நாள், மஞ்சுளா அணிந்து வந்த 10 சவரன் நகையில், 6 சவரன் நகையை அவரது மாமனார் - மாமியார் அடகு வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மீட்டு தரவில்லை.

மேலும், மஞ்சுளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 15ம் தேதி மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மஞ்சுளாவின் சகோதரர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'வரதட்சணை கேட்டு மஞ்சுளாவை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். தற்கொலைக்கு துாண்டிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மஞ்சுளாவின் உடல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், நேற்று மதியம், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, தற்கொலைக்கு காரணமானோரை கைது செய்யக்கோரி, மஞ்சுளாவின் உறவினர்கள் ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால், குரோம்பேட்டையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us