/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம் உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 10, 2024 05:50 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், முருக்கேரியில் கொஞ்சியம்மன் கன்னியம்மன், கங்கையம்மன் கோவில் உள்ளது. நுாற்றாண்டை கடந்த இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் புதிதாக கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7ம் தேதி காலை யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 8:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. 9:30 மணிக்கு, கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
* உத்திரமேரூர் டவுன், கீழாண்டை கொல்லை மேட்டுத்தெருவில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கும்ப ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 7:45 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
* உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சியில் சிறிய அளவில் இருந்த எல்லையம்மன் கோவிலை புதிய வடிவில் புனரமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, எடமச்சி மலை அருகே உள்ள அம்புலிகுன்றின் மீது மண்டபத்துடன் கூடிய கோபுர வடிவிலான கோவில் கட்டுமான பணி 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 7ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 7:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.