Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் 3.6 செ.மீ., மழை பதிவு

காஞ்சியில் 3.6 செ.மீ., மழை பதிவு

காஞ்சியில் 3.6 செ.மீ., மழை பதிவு

காஞ்சியில் 3.6 செ.மீ., மழை பதிவு

ADDED : ஜூலை 12, 2024 12:04 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்வதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அதிகாலை 4:00 மணி வரை விட்டு, விட்டு கனமழை பெய்ததால், அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில் 3.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்தபடியாக, உத்திரமேரூரில் 3.2 செ.மீ., மழையும், ஸ்ரீபெரும்புதுாரில் 2.8 செ.மீ., வாலாஜாபாத் 2.2 செ.மீ., குன்றத்துார் 2.2 செ.மீ.,செம்பரம்பாக்கத்தில் 1.9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us